கோவையின் முன்னேற்றத்திற்கான "நம்ம கோவை" வாட்ஸ்-ஆப் நண்பர்கள் சந்திப்பு

கோவையின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டது "நம்ம கோவை" வாட்ஸ்-ஆப் குழு. இந்தக் குழுவில் மாவட்டத்திற்குட்பட்ட முக்கிய அதிகாரிகளும், தன்னார்வலர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி தனியார் விடுதியில் நடைபெற்றது.

கோவை, ஜனவரி 18

கோவையின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டது "நம்ம கோவை" வாட்ஸ்-ஆப் குழு. இந்தக் குழுவில் மாவட்டத்திற்குட்பட்ட முக்கிய அதிகாரிகளும், தன்னார்வலர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி தனியார் விடுதியில் நடைபெற்றது.



இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன், பொள்ளாச்சி துணை ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன், மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார், விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.



நம்ம கோவை வாட்ஸ் ஆப் குழுவின் நிறுவனர் சி. கிஷோர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து, தன்னார்வலர்களும், அதிகாரிகளும் தங்களை அறிமுகம் செய்து உரையாற்றினர்.

இதனைத்தொடர்ந்து, அட்வைத் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரவிசாம், மாவட்டத்தின் மீதான கண்ணோட்டத்தையும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உரையாற்றினார். ராக் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், மாவட்டத்தின் மேம்பாட்டிற்கு அரசு நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, சி.ஆர். சுவாமிநாதன், விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் உள்ளிட்டோர் தங்களது பணிகள் குறித்தும், கோவையின் வளர்ச்சிக்கு தன்னார்வலர்களின் பங்களிப்பு குறித்தும் பேசினர்.

Newsletter

கோவை மாவட்டத்தில் மேலும் 15 காவல் நிலையங்களுக்கு ISO சான்றிதழ்

கோவை மாவட்டத்தில் தரமான காவல் சேவைகளுக்கான அங்கீகாரமாக தொண்டாமுத்தூர், செட்டிப்பாளையம், பேரூர் உள்ளிட்ட 15 காவல் நிலையங...

கோவையில் காணாமல் போன 10 வயது சிறுமி குளக்கரையில் சடலமாக மீட்பு

கோவை மாவட்டம் சூலூர் அருகே காணாமல் போன 10 வயது சிறுமி, இன்று குளக்கரையில் சடலமாக மீட்கப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத...

கோவையில் பி.ஏ.பி. வாய்க்கால் உடைப்பு: துரித நடவடிக்கையால் தண்ணீர் வீணாவதை தடுத்த அதிகாரிகள்.

கோவை செஞ்சேரிமலை அருகே பி.ஏ.பி. வாய்க்காலில் ஏற்பட்ட உடைப்பால் தண்ணீர் விவசாய நிலங்களில் புகுந்து வீணாவது குறித்து  தகவல...

பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல் உள்ளிட்ட பல்வேறு பணிகளை ஆய்வு செய்த கவுன்சிலர்

சிங்காநல்லூர் தொகுதி பீளமேடு பகுதியில் பூங்கா சுத்தம், மரக்கிளைகள் அகற்றல், சாக்கடை சுத்தம் உள்ளிட்ட பல்வேறு தூய்மைப் பண...

கோவை நீதிமன்றங்களில் டிசம்பர் 13ல் தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது

கோவை மாவட்ட நீதிமன்றங்களில் டிசம்பர் 13ம் தேதி தேசிய மக்கள் நீதிமன்றம் நடைபெறுகிறது. நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள சமரச...

கோயம்புத்தூர் வடக்கு மண்டல வளர்ச்சி பணிகளை மேயர் ஆய்வு

கோயம்புத்தூர் மாநகராட்சி வடக்கு மண்டலத்தில் மழைநீர் வடிகால், சிறுபாலம், நகர்ப்புற நலவாழ்வு மைய ஆய்வகம் உள்ளிட்ட வளர்ச்சி...