கோவையின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டது "நம்ம கோவை" வாட்ஸ்-ஆப் குழு. இந்தக் குழுவில் மாவட்டத்திற்குட்பட்ட முக்கிய அதிகாரிகளும், தன்னார்வலர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி தனியார் விடுதியில் நடைபெற்றது.
கோவை, ஜனவரி 18
கோவையின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டது "நம்ம கோவை" வாட்ஸ்-ஆப் குழு. இந்தக் குழுவில் மாவட்டத்திற்குட்பட்ட முக்கிய அதிகாரிகளும், தன்னார்வலர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன், பொள்ளாச்சி துணை ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன், மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார், விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

நம்ம கோவை வாட்ஸ் ஆப் குழுவின் நிறுவனர் சி. கிஷோர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து, தன்னார்வலர்களும், அதிகாரிகளும் தங்களை அறிமுகம் செய்து உரையாற்றினர்.
இதனைத்தொடர்ந்து, அட்வைத் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரவிசாம், மாவட்டத்தின் மீதான கண்ணோட்டத்தையும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உரையாற்றினார். ராக் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், மாவட்டத்தின் மேம்பாட்டிற்கு அரசு நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, சி.ஆர். சுவாமிநாதன், விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் உள்ளிட்டோர் தங்களது பணிகள் குறித்தும், கோவையின் வளர்ச்சிக்கு தன்னார்வலர்களின் பங்களிப்பு குறித்தும் பேசினர்.
கோவையின் முன்னேற்றத்திற்காக உருவாக்கப்பட்டது "நம்ம கோவை" வாட்ஸ்-ஆப் குழு. இந்தக் குழுவில் மாவட்டத்திற்குட்பட்ட முக்கிய அதிகாரிகளும், தன்னார்வலர்களும் உறுப்பினர்களாக உள்ளனர். இவர்களுக்கான சந்திப்பு நிகழ்ச்சி தனியார் விடுதியில் நடைபெற்றது.

இந்த நிகழ்ச்சியில், மாநகராட்சி ஆணையர் க. விஜயகார்த்திகேயன், பொள்ளாச்சி துணை ஆட்சியர் காயத்திரி கிருஷ்ணன், மாநகர போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார், விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம் உள்ளிட்டோர் சிறப்பு விருந்தினர்களாகக் கலந்துகொண்டனர்.

நம்ம கோவை வாட்ஸ் ஆப் குழுவின் நிறுவனர் சி. கிஷோர் அனைவரையும் வரவேற்றுப் பேசினார். தொடர்ந்து, தன்னார்வலர்களும், அதிகாரிகளும் தங்களை அறிமுகம் செய்து உரையாற்றினர்.
இதனைத்தொடர்ந்து, அட்வைத் நிறுவனத்தின் மேலாண்மை இயக்குநர் ரவிசாம், மாவட்டத்தின் மீதான கண்ணோட்டத்தையும், அடுத்து மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்தும் உரையாற்றினார். ராக் அமைப்பின் செயலாளர் ரவீந்திரன், மாவட்டத்தின் மேம்பாட்டிற்கு அரசு நிர்வாகம் மேற்கொள்ள வேண்டிய நடவடிக்கைகள் குறித்து எடுத்துரைத்தார். தொடர்ந்து, சி.ஆர். சுவாமிநாதன், விமான நிலைய இயக்குநர் மகாலிங்கம், போக்குவரத்து துணை ஆணையர் சுஜித் குமார் உள்ளிட்டோர் தங்களது பணிகள் குறித்தும், கோவையின் வளர்ச்சிக்கு தன்னார்வலர்களின் பங்களிப்பு குறித்தும் பேசினர்.